Friday, March 15, 2013

கண்ணீர் அஞ்சலிகள்




ஏனைய கண்ணீர் அஞ்சலிகள்

மன்னு கவி மகாலிங்கசிவம் தந்த பன்னூல் வித்தகர் பார்வதிநாதசிவம்

'உயர்குடி நனிஉள் தோன்றல் ஊனமில் யாக்கையாதல்
மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லராதல்
பெரிதுண ரறிவேயாதல் பேரறங் கோட லென்றாங்கு
அரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பர்'

என்னும் 'வளையாபதி' கூற்றுக்கமைய குன்றாக்குடி பிறந்த வல்லாளராகவும் கோதில்லாக் கவின் தமிழ்ச் சொல்லாளராகவும் இன்னுரை ஈயும் எழில்மாண் ஒள்ளியராகவும் விளங்கும் புலவர் பார்வதிநாதசிவம் இளநகை மிளிர உரையாடும்;, தக்காரைத் தகவுணர்ந்து மதிக்கும் தண்ணியர், பன்னூல் தந்த நுண்மாண் குரிசிலர்.

Thursday, March 14, 2013

பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன் கண்ட செவ்வி



கேள்வி : நாட்டுக்கூத்தில் தங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்போது? எப்படி?

பதில் : 1956ம் ஆண்டு நான் 'கலாசார அமைச்சின் தமிழ் நாடகக் குழு'வின் தலைவராக நியமிக்கப்பட்டேன். அக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நாட்டுக்கூத்து மரபை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
கேள்வி : நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்தி மேடையிடுவதில் பெருவெற்றி கண்டிருக்கிறீர்கள். கர்ணன் போர், இராவணேஸ்வரன் முதலிய நாடகங்கள் பெருவெற்றி ஈட்டி உங்களுகு;குப் பெருமை சேர்த்துள்ளன. நாட்டுக்கூத்தை நவீனமயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு ஏற்பட்டது?

தமிழ்மலை பண்டிதமணியுடன் முதற் சந்திப்பு



பண்டிதமணி அப்போது புகழின் உச்சியிலிருந்தார். அவரது சிந்தனைத் திறனும் பேச்சாற்றலும் அவருக்குப் புகழ் சேர்த்தன. அவரது எழுத்தாற்றல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

ஈழத்தின் பிரபல வார இதழ்களை அவரது கட்டுரைகள் அலங்கரித்தன. தமிழ் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்த கலைமகள் இதழில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன.

வாணிதாசனுடன் முதற் சந்திப்பு



பாவேந்தர் பாரதிதாசனின் முதலாவது சிஷ்யன் என்று சுரதாவைச் சொன்னால் இரண்டாவது சிஷ்யனாக வாணிதாசனைச் சொல்லலாம்.

பாரதிதாசனின் ஊராகிய புதுச்சேரியைச் சேர்ந்த வாணிதாசன், பாரதிதாசனிடம் தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள் ஆகிய நூல்களை முறைப்படித்துப் பண்டிதர் தேர்வில் சித்திபெற்றவர். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாரதிதாசனின் இலகு நடையையே பின்பற்றிக் கவிதை எழுதிய அவர் பாரதிதாசனின் அன்புக்குப் பாத்திரமானார்.

நாவலாசிரியர் பார்த்தசாரதியுடன் முதற் சந்திப்பு



தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் சங்க இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர் நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள். அவர் ஒரு சிறந்த பேச்சாளரும் ஆவார்.

தமிழ் நாவலர்களை விரும்பி வாசிக்கும் வாசகர்கள் அவருடைய குறிஞ்சி மலர் என்ற நாவலையும் பொன்விலங்கு என்ற நாவலையும் வாசிக்கத் தவறி இருக்கமாட்டார்கள்.

பாவேந்தர் பாரதிதாசனுடன் முதற் சந்திப்பு



அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன். அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தமிழக அறிஞர்கள் பலரும் வந்து தங்குவதுண்டு.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த பன்மொழிப் புலவர் தேவநேயப் பாவாணர் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.